கலியுகப் பொங்கல் கவிதை

கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
'Happy Pongal" வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

தமிழன்
'எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு'
பட்டிமன்றங்கள் பொதிகையில்.


ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்


வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.UERYC6778SZ5
- கவிஞர் சேவியர்

3 comments:

  1. 50% correct than irunthalum ellarum apadi ilela pongal tamilnadu-ah nesikuravanga nalavithama than kondaduvanga aparam, vivasayiekkal athuvum ipa konjam munettram akirukku varuthapathenga nengalum pongala sirappa kondadunga

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்