பொங்கல் தினத்துடன் எமது உள்ளங்களில் நல்ல சிந்தனைகள் உருவாகட்டும். அதனூடாக நல்ல சூழல் பிறக்க வழி வகுக்கும். தை பிறந்தால் வழி இப்படியாவது பிறக்கட்டும். மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! | ![]() |
Showing posts with label பொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள். Show all posts
Showing posts with label பொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள். Show all posts
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பொங்கல் கவிதை
பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம் தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது. தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் நாள்! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! | ![]() |
தமிழர் திருநாள் வாழ்த்து கவிதை
தை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங்கள் அகலும்- என்ற நம்பிக்கையில் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்...! | ![]() |
ஈழத்தின் தைப் பொங்கல் கவிதை
அதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும், சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க கரும்பும் வாழைப்பழங்களும் இனிப்பு பலகாரமும் ஒரு பககம் இருக்க மூன்று கல்வைத்து அதில் விறகு வைத்து கற்பூரம் கொண்டு தீ மூட்டி இறை வழிபாட்டுடன் புதுப்பானை அதிலிட்டு அரிசியை அள்ளி ஆதவனை வணங்கியே அப்பாவைத்தொடர்ந்து அனைவரும் பானையிலிட்டு தேனும் சர்க்கரையும் பாலும் சேர்த்து தித்திக்கும் பொங்கல் செய்து ஞாயிறுக்குப் படைத்து பட்டாசுகள் விண்ணைப்பிளக்கும் ஓசையுடன் வெடிவெடித்து அயலவர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்று கூடி கொடுத்துப்பரிமாறி ஒன்றாயிருந்து உழவருக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சிவெள்ளத்தில் மகிழ்ந்த அத்திருநாள். நினைக்கையில் நெஞ்சம் கொஞ்சம் வேதனை தருகிறது நிலையற்ற வாழ்வால் நித்தமும் பொங்கல் முற்றத்தில் நிலையாகின்றது.. தனிஈழத்தின் தரணியில் அலையென மக்கள் பொங்கும் நிலை. | ![]() |
கலியுகப் பொங்கல் கவிதை
கணினி நிறுவனங்களின் வாசல்களில் மின் விளக்கு அடுப்பில் தெர்மாகோல் பொங்கல் 'Happy Pongal" வாசகங்களுடன். பொங்கலின் பொருள் தெரியா கழுத்துப் பட்டை மென் பொறியாளர்களுக்கு மின்னஞ்சல் உதடுகள் காதலியரிடமிருந்து. தமிழன் 'எப்போது பொங்குவான் தன் நிலைகண்டு' பட்டிமன்றங்கள் பொதிகையில். ரங்கநாதன் தெருக்களிலும் பிட்சா கார்னர்களிலும் நகைக்கடைகளிலும் கொடிகட்டிப் பறக்கும் விடுமுறை வருமானம் வலிகளின் வரவால் எலிகளைத் தின்று வளைகளில் வாடும் விவசாயத் தோழன் மட்டும் கடன் வாங்கிப் பொங்குகிறான் பொங்கல். பொங்கலோ பொங்கல். பொங்கலோ பொங்கல்.UERYC6778SZ5 - கவிஞர் சேவியர் | ![]() |
தை பொங்கலே
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! | ![]() |
பொங்கல் திருவிழா கவிதை
தைப்பெண்ணே வருக வருக உன் வரவால் ...எம் மக்கள் மனம்.. மகிழட்டும்.. துவண்டு கிடக்கும் எம் ...சம்முதாயம்.. துணிந்து எழட்டும் வாடீக் கிடக்கும்.. வயல் வெளியெங்கும்.. வளங்கள்...பெருகட்டும்.... பொங்கும் மங்களம் எங்கும் பொழிய பொங்கலே நீ... பொங்கி....வழிக..... நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் | ![]() |
தைத்திங்கள் தமிழ்ப்புத்தாண்டு கவிதை
தைத்திங்கள் தலைநாள் தமிழுழவர் ஒளிநாள் தமிழ்மக்கள் பெருநாள் தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள் தென்திசை ஓய்ந்த கதிரவன் வெற்றித் திலகம்போல் வடதிசை நகரும் நன்னாள் நெல்லுக்கும் உழவர்க்கும் மடிதரும் நிலம் உயிர்தரும் நீர் மூச்சுதரும் காற்று ஒளிதரும் சூரியன் மழைதரும் ஆகாயம் என்ற ஐம்பூதங்களுக்கும் நன்றியோடு விழா எடுக்கும் பொன்னாள் வரப்புகளில் விளையாடி வயலுக்குள் வாழ்ந்து வளர்ந்த நெற்கதிர்களை வெண்மணி அரிசியாக்கி புத்தம்புதுப் பானையில் பாலும் சர்க்கரையும் பாகும் பருப்புமிட்டுப் பொங்கி மஞ்சளும் இஞ்சியும் கரும்பும் கற்கண்டும் கூட்டி நிலத்தை முத்தமிட்டுச் சூரியனை வாழ்த்தி உழவர்தம் உயிர் நெகிழும் பொங்கல்நாள் தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டின் தித்திப்பு வாழ்த்துக்கள்! அன்புடன் புகாரி | ![]() |
பொங்கல் திருவிழா வாழ்த்து கவிதை
பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது கரும்பைக் கைபிடிக்க கட்டழகைக் கண்பிடிக்க குறும்பைச் சொல்பிடிக்க குமரியிதழ் தேன்வடிக்க வயலில் வாய்க்காலில் ஒய்யார நடைநடந்து பயலும் பொண்ணுகளும் பாடிவரும் பொங்கலிது அன்னம் கொடுப்பவளின் அருமைகளை எண்ணிமனம் நன்றிப் பெருக்கோடு நிலம்வணங்கும் பொங்கலிது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் அன்புடன் புகாரி | ![]() |
பொங்கல் வாழ்த்து கவிதை
மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் | ![]() |
பொங்கல் வாழ்த்து
* * * பொங்கல் வாழ்த்து * * * மங்கல அணியும் பொட்டும் . . மரகத மணிபோற் கண்ணும் குங்கும நுதலும் தண்டைக் . . குலுங்கிடும் காலும் மஞ்சள் தங்கிய முகமும் வண்ணத் . . தடம்பணைத் தோளும் கொண்ட மங்கையர் கைபார்த் துண்ண . . மலர்கவே பொங்கல் நன்னாள். பூச்சிறு மழலை மேனி . . புத்துடை நகைகொண் டாட ஆச்சியர் துணைவர் சேர . . ஆனந்தத் தமிழ்ப்பண் பாட பாற்சுவை வழங்குநன் னாள் . . பழந்தமிழ் வளர்த்த பொன் னாள் போற்சுவை நாளொன் றில்லை . . பொலிகவே இன்பப் பொங்கல். | ![]() |
தமிழ்ப் பொங்கல்
கரும்புக்கை நீட்டுகின்ற தோட்டம், எங்கள் கற்கண்டுச் செந்தமிழை நினைவுறுத்தும் விரிந்தஇலை பரப்புகின்ற வாழை, பொங்கல் விருந்துக்கு வரச்சொல்லி அழைப்பு வைக்கும் வரிசைபெறும் நெற்குவியல் பொன் மலைபோல் வளம்காட்டி வறுமைக்கு விடை கொடுக்கும் தரிசுநிலம் திருத்திவந்த பயன் அனைத்தும் தைத்திங்கள் தரும்பொங்கல் எடுத்துரைக்கும் நன்செய்யும் புன்செய்யும் தழைத்து நிற்கும் நல்லழகில் தோய்ந்தவர்க்கு நலிவே இல்லை மண்செய்யும் விந்தைகளின் விளக்கம் ஆகும் மருதத்தின் மண்புசொல்ல வார்த்தை யில்லை புண்செய்து போட்டநிலம் நம்மைப் பார்த்துப் 'புசி'என்று புகன்றிடவே போகும் தொல்லை ! பண்செய்த தமிழாலே உழவைப் போற்றிப் பாடாமல் நமக்கிங்கே என்ன வேலை ? *** இக்பால் | ![]() |
வருக தை பொங்கலே
தை பொங்கலே மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! | ![]() |
சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!
தைப்பெண்ணே வருக வருக உன் வரவால் ...எம் மக்கள் மனம்.. மகிழட்டும்.. துவண்டு கிடக்கும் எம் ...சம்முதாயம்.. துணிந்து எழட்டும் வாடீக் கிடக்கும்.. வயல் வெளியெங்கும்.. வளங்கள்...பெருகட்டும்.... பொங்கும் மங்களம் எங்கும் பொழிய பொங்கலே நீ... பொங்கி....வழிக..... நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் | ![]() |
பொங்கல் திருவிழா..
வங்கக் கடல் தமிழன் எங்கு குடி இருப்பினும் சங்கத் தமிழ் சிறப்பை மறந்து வாழ்வனோ பொங்கல் திருநாளினை போற்றி மகிழ்ந்திட தங்க நிறச் சூரியத் தலைவனை முந்தி எழுந்து பொங்கிடப் புதுப் பானை அலங்கரித்து.. செங்கரும்புப் பந்தல் தொங்க மாவிலை தோரணம் முடிக்க.. மங்களம் நிறைந்த மனையாள் நீராடிப் புது பட்டுடுத்தி தங்கமக்கள் சிறுமழழை சூழ சேவலும் மயிலும் கூவ வெங்கலமாய் பொங்கி வரும் கதிரவனை வணங்கி செங்கீற்று விள்க்கேற்றி கற்பூற சுடரேற்றி விறகடுக்கி தங்கமென சிவந்த தணலடுபில் வைத்த் புதுப்பானை நீரூற்றி அங்கமழ பாடுபட்டு உழுவார் நிலம் புலந்த் புத்தரிசி செங்கமலச் சோலை சேகரித்த தேனோடு பாகும் பருப்பும் எங்கள் குலமாத பொழிந்த பசும் பாலும் நெய்யுமிட்டு பொங்கலோ பொங்கல் எனக் குரவியிட்டு வரப்புயர வாழ்வளித்த மங்காத செல்வம் இயற்கை அண்ணைக்கு நன்றிப் பெருவிழா சங்க தமிழினதின் பெருவிழா பொங்கல் திருவிழா.. மணிவண்ணன் | ![]() |
சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!
தைப்பாவாய் தைப்பாவாய் வாசலில் வந்தாள் தமிழ்ப்பாவாய் தீபங்கள் ஏந்திய கைப்பாவாய் தென்றலென வந்தாள் தேன்பாவாய் மார்கழிப் பெண்ணுக்கு இளம்பாவாய் மாதங்கட்கெல்லாம் தலைப்பாவாய் தேரினில் ஏறிய தென்பாவாய் ஊர்வலம் வாராய் ஒளிப்பாவாய் சூரியதேவன் சுடர்ப்பாவாய் சுந்தரவதனச் செம்பாவாய் ஏருழவர் கை உழைப்பாவாய் ஏழை எளியவர்க்கு இன் பாவாய் அன்பென்று கொட்டு முரசாவாய் அனைவர்க்கும் வாழ்வு என்றறைவாய் இன்புறப் புல்லாங் குழலிசைப்பாய் இனிய தமிழ்க்காதல் யாழிசைப்பாய் பொன் யுக வாசல் திறந்ததென்று கொம்பெடுத்தூதடி எம்பாவாய் சங்கு முழங்கடி எம்பாவாய் சங்கடம் தீர்ந்திட கைகோர்ப்பாய் கூத்துப் போடடி பெண்பாவாய் பறைகொட்டி முழங்கடி எம்பாவாய் தக்கத் திமிதிமி தக்கத் திமியென நர்த்தனம் ஆடடி பொற்பாவாய் போற்றி பாடடி பொன்பாவாய் புதுயுகத்தின் பொங்கல் எம்பாவாய் ஆற்றுகலைகள் அத்தனையும் பொங்க ஆனந்தக் கும்மி அடி பாவாய் சு.வில்வரத்தினம் | ![]() |
பொங்கல் திருநாள்
புதுப்பொலிவும், பொன்விடியலும் தந்து நற்பொழுதுபுலரும் என்ற நம்பிக்கையுடன் மலர்ந்துள்ள சித்திரை உலகத் தமிழர்களின் உள்ளம் எல்லாம் குளிரும் வகையில் தமிழ் ஈழம் பிறக்கவும், தமிழர் தாகம் தணியவும், ஈழத்தமிழர் இன்னல் தீரவும், தாய்த் தமிழகத்தின் குமுறல் நீங்கவும் வழிவகுக்கட்டும் | ![]() |
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்.. உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும் அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும். | ![]() |
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
பொங்கும் பொங்கலைப்போல் அனைவரது மனதிலும், வீட்டிலும், நாட்டிலும் இன்பங்கள் பொங்க வேண்டும். அளவற்ற செல்வங்கள் வந்து அரவணைக்க வேண்டும். தமிழர் தினமான தை ”தை” தமிழர் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும். | ![]() |
Subscribe to:
Posts (Atom)