Showing posts with label பிறந்த நாள் கவிதைகள். Show all posts
Showing posts with label பிறந்த நாள் கவிதைகள். Show all posts

பிறந்த நாள் வாழ்த்து

உன் பிறந்த நாள் அல்லவா

கண்முன்னே சொன்னால் மறந்து போகும்

கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்


எப்படி சொல்ல என் வாழ்த்தை

சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை

என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு

என்று வேண்டி வாழ்த்துகிறேன்

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று

பிறந்த நாள் வாழ்த்து

பூக்களின் வித்து நீ...!

புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்

முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்

பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்

பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!

இரண்டாம் நிலவு



நீ பிறந்தாய்…
பூமிக்கு

இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!

வாழ்த்தலாம் வாங்க





வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் காதல் தேசத்தில்



என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை

பிறந்தநாள் பரிசாக


வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)

பிறந்த நாள் வாழ்த்து...!

பிறந்த நாள் வாழ்த்து...!
பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்கு
கொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை


உன் பிறப்பில் தான்

கண்டுகொண்டேன்…

கவிதைக்கும்

உயிருண்டென!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

நீ பிறந்த

பிறகுதான்

உன் அப்பாவுக்கே

பெயர் வைத்தார்களா?

அழகப்பன் என்று!

என் காதலியின் பிறந்தநாள்

தன்

சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை

முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான்

பிரம்மன்!

என் காதலியின் பிறந்தநாள்


கால எந்திரம்

கிடைத்தால்

நீ பிறந்தபொழுது,
நான் என்ன

செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை



மழைக் காலம்,

கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று

எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம்

அழகுக்காலம்!*

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க்

கொண்டாட
தேவதைகளே

தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?

என் காதலியின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை




உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள்

அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!


பிறக்கும்போது

3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய்

உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான்

சேர்க்க முடிந்ததா?

பிறந்தநாள் வாழ்த்து கவிதை


நீ பிறந்த

மருத்துவஅறைக்கு

ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க

அங்குதான்
பிரசவம்

பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம்

கர்ப்பிணி பெண்கள்.

பிறந்தநாள் வாழ்த்து கவிதை


ஒருநாளுக்காக

ஓராண்டு காத்திருக்க

முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை

மாதம்தோறும்…
இல்லையில்லை,

நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும்

கொண்டாடுவோமா?

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை


உன் பிறந்தநாளன்று

முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென

சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில்

வாழ்த்துவதற்காய்

நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன
உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று...

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் ...

எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை...
பல்லாண்டு வாழ்க ...
நீயும் உன் உணர்வுகளும்...


நிறைவாய் வாழ்க…



விந்தையான உலகம்…….!
விழங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்கழுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!

- அன்புடன் ஆனந்தன்