Showing posts with label திருமண வாழ்த்து கவிதைகள். Show all posts
Showing posts with label திருமண வாழ்த்து கவிதைகள். Show all posts
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும்
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?
வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!
நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!
தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க!
தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க
நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட
கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க
இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!
திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!
அன்புடன் வெற்றிவேல்
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
நண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள்
எப்போது ஒன்று சேர்வோம்?
எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்
இனிமேல் உமக்கு இல்லை!
உணர்வுகளால் நேற்றுவரை
உரையாடிய காதல்ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும்
உடலாலும் இணைகிறது!
உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம்!
திருமணமாம் உமக்கின்று!
இதயத்தின் உரசல்களில்
உருவான ஒளித் தீப்பிழம்பு
விண்வெளியில் பயணித்து
கண்மணிகள் கதைசொல்லும்!
முத்தான காதல் செய்தமணமக்கள் ஓருயிராய்
வாழ்க பல்லாண்டு
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
சாத்திரங்கள் பழையன
சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே
சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது
பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே
அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை
மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம்
இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்
உன்மனம்மணமகளின் சொத்தென
சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர்
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம்- நட்புகள்
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
மலர்களில்
மாலை கட்டும் வித்தையை உன்
கண்களுக்குச் சொல்லி
வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்
புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்
வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்
மாந்தர்களும் வாழ்த்துவர்
திருமண வாழ்த்து கவிதை
நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....
பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....
சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....
பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!
by
சக்தி
by
சக்தி
வாழ்ந்திட வாழ்ந்திடவே.!
விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.!
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.!
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
கையோடு கை சேர்த்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாவது நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாவது நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்
திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்
சொர்க்கம் மண்ணில் கொண்டு சொந்தங்களே நீவீர் வாழ்க! பெற்றோர் உற்றோர் சுற்றம் போற்றும் வண்ணம் வாழ்க! இங்கிருந்து கொண்டே வாழ்த்துகின்றேன் வாழ்க! மணமகளும் மணமகனும் என்றும்.. இணைந்தே வாழ்க! இல்லறத்தை இ(ணைந்)னிதே வெல்க!!! |
திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்
| கண்களாலே காதல் பேசி வார்த்தையாலே வர்ணம் பூசி பாசம் என்னும் கவிதையெழுதி...... நேசத்தோடு வாழனும் நண்பா ..... வாழ்க வாழ்கவே வாழ்க என்றும் வானம் உள்ளவரை வாழ்க என்றும் வாழ்க வாழ்கவே வானம் வாழும் வரை வாழ்கவே எங்கள் நெஞ்சில் வாழும் நண்பா வானம் போல வாழனும் நண்பா நீயும்... (மணமகளும் மணமகனும்) கூட சேர இன்பம் வந்து உங்களை சூழ... வாழ்க வாழ்கவே வாழ்க என்றும் | ![]() |
திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்...... இவர்களின் நிச்சயிக்கப்பட்டுவிட்ட சொர்க்கத்திற்கு, திருமணநாள் நல்வாழ்த்துகள்... |
திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்
| அன்பின் நண்பர்களே, இதயத்தால் இணைந்திட்ட இவர்களின் இல்லறப் பாதையெங்கும் உங்களின் வாழ்த்துக்களால் தோரணம் கட்டிட விரும்பி அழைக்கிறோம்! |
திருமண {கல்யாண} வாழ்த்துக்கள்
| இதுநாள்காறும் பூமியாய் நின்று நிலவை ரசித்திருந்தவன்; நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து இராட்டிணம் சுற்றப் போகிறான் திருமண வானில்! | ![]() |
திருமண [கல்யாண] நாள் வாழ்த்து கவிதை
பூவினால் காய்கள் தோன்றும்! புலவனால் கவிதை தோன்றும்! நாவினால் சொற்கள் தோன்றும்! காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம் இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு கல கல பேச்சு உண்டு! களங்கமில்லா தோற்றமுண்டு! -தன் பல கலைத் திறனினாலே -மணமக்கள் நலிவடையா விளை நிலம் போலானார்! கன்னத்தில் பொலிவு தோன்றும் கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது எண்ணங்களிலும் இனிமை தோன்றும் வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர் நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று… | ![]() |
திருமண வாழ்த்து கவிதை
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி நல்லறம் போற்ற செய் ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து வாகை சூடி வெல் உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும் வாய்மை வெல்லுமென் றுணர் ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும் உனதாய் விளங்க நில் எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து ஓங்கி நிறுத்துநுன் திறமை. ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம் அகற்றி வாகை சூழ் ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும் மையம் கொளா செய். ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று வற்றாமை செய்உன் மனம். ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய் நோயிலா வாழ்க்கை கொள். ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து சீரிய கொள்கை வெல். அஃதே அமைந்திட வேண்டும் நிலவன் | ![]() |
திருமண வாழ்த்து
| (உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி) அன்பே என்று அழைத்திடுங்கள்! ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்! இதயங்களை ஈந்திடுங்கள்! ஈரவிழிகளை துடைத்திடுங்கள்! உறவுகளை நினைத்ததிடுங்கள்! ஊடல்களை மறந்திடுங்கள்! எளிமைக்கு வழிவிடுங்கள்! ஏழ்மைக்கு உதவிடுங்கள்! ஐயங்களை அழித்திங்கள்! ஒரு யுகம் கடந்திடுங்கள்! ஓசையின்றி உயர்ந்திடுங்கள்! ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்! | ![]() |
Subscribe to:
Posts (Atom)


![திருமண [கல்யாண] நாள் வாழ்த்து கவிதை](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzfSJ1pg1vM3eoAuS3Gh-3n7PbgvN-hlwibSiDYZ38ftas1Q9HJbrMohtf6iEtVOiNqxoZeUX3qsaNxbAp2Esz6xzeEAR9214-PMK489DO2dfWfJpaAb8HI4Y1XUQWIKI5gWdgFzP2RodD/s800/h6.jpg)

