அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்


என் தாயின் தியாகத்தை
ஏற்றி நான் போற்றினேன்
மகனுடைய நலனுக்காய்
மகத்தான சேவை செய்தாள்
தந்தையாக நானாகி
தத்தளித்த வேளையிலே
தன் மகனுக்காய் உருகிய
தாரத்தின்
பெருமையுணர்ந்தேன்
அன்னையர் தினத்திலே
அவளுடைய நினைவு காக்க
அம்மாவாய் திகழ்கின்ற என்
மனையாளின் புகழ் சொல்வேன்
அன்னையர் தினமதிலே உங்கள்
அன்புத் தெய்வங்களின்
நினைவாக
அருமை நண்பர்களே நீங்கள்
மணந்தவளை போற்றிடுவீர்
அன்னையர் தினத்தினில்
அழியாத உண்மை சொல்வேன்
மாதா மடும் அன்னையல்ல எமை
மணந்த மனையாளும் அன்னைதான்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்