அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்


கார்முகிலைக் கிழித்துக்
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
அன்புடன்...
வாணி

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்