அன்னையர் தின வாழ்த்துக்கள்

ராஜாத்தி என்று அன்பாய் குழையவும்...
சீரியல் பார்ப்பதற்காய் சண்டை போடவும்..
இரவில் தூங்காமல் புத்தகம் படிப்பதற்கு கோவிக்கவும்....
தோழியோடு வீடு வந்தால் ஓரிரு வார்த்தைகளில் தனியே விடவும்...
என் முகத்தில் தோன்றும் திடீர் பறுக்களுக்காய் கவலைபடவும்...
புத்தகம் பிரித்த உடன் தூங்கி போகவும்...
எந்த கோவிலுக்கு போனாலும் எனக்காக அர்ச்சனை செய்யவும்...
உன் எல்லா செயல்களிலும் நான் இருப்பேன்
என்னால் மாதம் ஒரு முறை உன்னை பார்க்க வரவும்
எப்போதாவது இப்படி கவிதை எழுதவும் மட்டுமே முடிகிறது.

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்