அன்னையர் தின வாழ்த்து வாழ்த்து கவிதைகள்


 *உன்
 கருப்பை மூலம் எனக்கு
 இரப்பை கொடுத்தவளே !
 உன் மீது
 வெறுப்பை கொடுக்குமுன் - இறைவன் எனக்கு
 இறப்பை கொடுக்கட்டும் !
 *ஆம்
 நான் இறைவனிடம்
 பிரார்த்திப்பதும் அதுதான்.
 *நான் கேட்டு
 நீ மறுத்த  நாட்களை
 நான் சந்தித்ததேயில்லை...*
 *அதுபோல
 நீ கேட்டு
 நான் மறுக்கும்  நாளொன்றில்
 என் பெயர் பிணம் !*
          - ரசிகவ் கே.ஞானியார்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்